தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...
செல்லத்த அழவச்சிட்டிங்களேடா.. இணையத்தில் வெளியாகும் கடுமையான பதிவுகளால் கண்ணீருடன் சமந்தா பேட்டி..!

பிரபல நடிகை சமந்தா தனது சமூக வலைதளப்பதிவின் மூலமாக மயோசிடிஸ் சென்ற ஆட்டோ இம்யூன் கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் நான் குணமடைவேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் நவம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ள யசோதா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அப்போது மயோசிடிஸ் குறித்து அவர் தெரிவிக்கையில், "இன்ஸ்டாகிராமில் நான் கூறியவாறு சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில மோசமான நாட்களாகவும் இருந்தன.
உடல்நிலை காரணமாக உயிருக்கே ஆபத்தாக இருக்கிறேன் என செய்திகளும் வந்தது. தற்போது வரை நான் மரணிக்காமல் இருக்கிறேன். மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கிறேன். எதிர்த்து போராடுவேன். பல விஷயங்களை கடந்து இந்த உயரத்திற்கு நான் வந்துள்ளேன்" என்று கண்கலங்கி தெரிவித்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் நாங்க இருக்கோம் சேம் என்றும், அடப்பாவிகளா., செல்லத்த அழவச்சிட்டிங்களேடா என்றும் கூறிவருகின்றனர்.