#Breaking: சூதாட்ட வழக்கில் பிரபல நடிகருக்கு அமலாக்கத்துறை சம்மன்: அக்.06 நேரில் ஆஜராக உத்தரவு.!



Actor Ranbir Kapoor summoned by Enforcement Directorate 

 

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரன்பீர் கபூர். இவர் ஹிந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் நடிப்பில் வெளியான பிரம்மஸ்திரா திரைப்படம் நல்ல வசூல் மற்றும் வரவேற்பை பெற்றது. 

அதனைத்தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து மனதை பகிர்ந்துகொண்ட நடிகர் ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

இதற்கிடையில், மகாதேவ் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி மூலமாக, ஊழல் மற்றும் மோசடி நடந்துள்ளது. இந்த விஷயத்தில் மகாதேவ் செயலியை ரன்பீர் கபூர் விளம்பரப்படுத்தி இருக்கிறார். 

சூதாட்ட செயலியான மகாதேவ் பல மாநிலங்களில் கிளைகளை வைத்து மக்களிடம் மோசடி செய்ததாகவும் தெரியவருகிறது. இதன் தலைமை நிறுவனம் அரபு அமீரகத்தில் இருக்கிறது. 

இதனால் ஊழல் மற்றும் மோசடி குற்றசாட்டுகளை தொடர்ந்து, 06ம் தேதி தங்களின் விசாரணைக்கு ஆஜராக ரன்பீர் கபூருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.