ஆத்தி.. திருச்சிற்றம்பலம் பட வெற்றிக்குபின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளாரா தனுஷ்?.. எத்தனை கோடி தெரியுமா?..! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!!

ஆத்தி.. திருச்சிற்றம்பலம் பட வெற்றிக்குபின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளாரா தனுஷ்?.. எத்தனை கோடி தெரியுமா?..! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!!



Actor Dhanush salary increased

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஜகமேதந்திரம், மாறன், ஹிந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மென் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. இதுவரையிலும் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்த நடிகர் தனுஷ், இப்படத்தின் வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கு ரூ.30 கோடி சம்பளம் உயர்த்தி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor dhanush

அவரிடம் சம்பளத்தை குறைக்கும் படி தயாரிப்பாளர்கள் நிர்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், தற்போது நானே வருவேன் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் வாத்தி திரைப்படம், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம், வடசென்னை இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.