இனிமேல் வங்கி விடுமுறை என்ற கவலை வேண்டாம்! இனி 24 மணிநேரமும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்!

இனிமேல் வங்கி விடுமுறை என்ற கவலை வேண்டாம்! இனி 24 மணிநேரமும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்!


24 hurs neft money transfer


டெக்னலாஜி வளர வளர பொதுமக்களுக்கு வேலைச்சுமை அதிகமாக குறைந்துள்ளது. ஆரம்பத்தில் பணம் எடுப்பதற்கு வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை இருந்தது. இதனை தடுக்க ATM வசதிகள் வந்தது. பின்னர் பணம் எடுப்பதற்கு வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை இருந்தது. அதற்கும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. பின்னர் வீட்டில் இருந்துகொண்டே பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளும் எளிமை வசதியான நெட் பேங்கிங் வந்தது.

நெப்ட் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை மட்டுமே ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளமுடியும். ஏற்கெனவே IMPS முறைப்படி, எந்த நேரமும் ஆன்லைன் பணப் பரிவத்தனை செய்யும் முறை இருந்தாலும், 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளமுடியும்.

neft

இந்தநிலையில், நெப்ட் முறைப்படி, 24 மணிநேரமும் பணப் பரிவர்த்தனை செய்யும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், வங்கி விடுமுறை தினங்கள் உட்பட வருடத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணிநேரமும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.