×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே.. பறக்கும் விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்து தாய் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

இப்படியெல்லாம் இருப்பாங்களா.. பறக்கும் விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்து தாய் செய்த காரியம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Advertisement

பறக்கும் விமானத்தில் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தில்  டாய்லெட்டில், டாய்லெட் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து குழந்தையை அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் குழந்தைக்கான தாய் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் குழந்தை தன்னுடையது என யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர விசாரணை கொண்டதில் ஒரு பெண்ணின் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் சமீபத்தில் குழந்தை பெற்றததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடு வானில் பிறந்த குழந்தையை டாய்லெட் பேப்பரில் சுற்றி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#flight #baby #toilet
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story