×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட பாவமே..!! ஆபாச படம் பார்த்த சிறுவன்.. அதிபர் கிம் க்கு தெரிந்ததும் என்ன செய்தார் தெரியுமா..?

வடகொரியா நாட்டில் ஆபாச படம் பார்த்த ஒரு பள்ளி மாணவன் அவரது குடும்பத்துடன் நாடுகடத்தப்பட்ட

Advertisement

வடகொரியா நாட்டில் ஆபாச படம் பார்த்த ஒரு பள்ளி மாணவன் அவரது குடும்பத்துடன் நாடுகடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா அரசாங்கம் நாடு முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. வட கொரியாவில், ஆபாசப் பொருள்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அல்லது அதை வாங்கி விற்பனை செய்வதில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படுகிறது.

நாட்டின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் ஆபாசத்தைப் பார்ப்பது சமூகத்தை அழிப்பதாக உணர்கிறார். இந்நிலையில் ஆபாச படம் பார்த்து பிடிபட்ட ஒரு சிறுவனுக்கு கிம் ஜாங் உன் ஒரு பயங்கரமான தண்டனையை வழங்கியுள்ளார்.

டெய்லி என்.கே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு பள்ளிக்குச் செல்லும் சிறுவன் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது தனது வீட்டில் ஆபாச படம் பார்த்துள்ளான். வட கொரியா போலீசார் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக சிறுவனும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அந்நாட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டு, நாட்டின் எல்லைப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளனர். ஆபாச படம் பார்த்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் தூக்கிலிடப்படவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News #Crime #North Korea
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story