உலகின் மிகவும் குள்ளமான மனிதர் உயிரிழந்தார்..! அவர் சாகும்போது அவரது உயரம் எவ்வளவு தெரியுமா?
World smallest man died in Nepal
உலகின் மிக குள்ளமான மனிதரான நேபாள நாட்டை சேர்ந்த ககேந்திர தாபா மாகர் உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு நேபாளத்தில் பிறந்து வளர்ந்த இவர் வெறும் 2 அடி மட்டுமே உயரம் கொண்டவர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு, உலகின் மிகவும் குள்ளமான மனிதர் என அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார். தற்போது 27 வயதாகும் ககேந்திர தாபா மாகர் கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சலால் அவதிப்படுவந்துள்ளார்.
நேபாளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த ககேந்திர தாபா மாகர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உலகின் மிகவும் குள்ளமான மனிதர் என அழைக்கப்பட்டுவந்த ககேந்திர தாபா மாகர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362