கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்ததும் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! உலகிலையே இப்படி நடப்பது இது தான் முதல் முறை!!
பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்த்து மருத்துவ உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள சம்பவம்
பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்த்து மருத்துவ உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்க்காக சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு பிரசவவலி ஏற்படவே மருத்துவர்கள் அந்த பெண்ணை பிரசவ அறைக்கு அழைத்துசென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு மூன்று ஆணுறுப்புகள் இருந்துள்ளது. பொதுவாக 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் 2 பிறப்புறுப்புகளுடன் பிறக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் முதல் முறையாக ஒரு குழந்தை மூன்று ஆணுறுப்புடன் பிறந்தது இதுவே முதல் முறை என்றும், இதற்கு முன்னதாக உலகின் எந்த ஒரு இடத்திலும் இப்படி ஒரு சம்பவம் பதிவாகவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த குழந்தையை சோதனை செய்தபோது, மூன்று ஆணுறுப்பில் ஒன்று மட்டுமே செயல்படுவதாகவும், மற்ற இரண்டால் அந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362