×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

20 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கனவு.. 20 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..

தனது கணவரின் கனவில் வந்த லாட்டரி எண்ணை வாங்கிய பெண் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறிய சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

Advertisement

தனது கணவரின் கனவில் வந்த லாட்டரி எண்ணை வாங்கிய பெண் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறிய சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

கனடா நாட்டின் டொரோண்டோ என்னும் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் Deng Pravatoudom (57) என்ற பெண். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தூங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டுள்ளார். அந்த கனவில் ஒரு லாட்டரி எண் வந்துள்ளது. அந்த எண்ணை நினைவில் வைத்து, அந்த எண்ணை தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

அன்றில் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது கணவரின் கனவில் வந்த அந்த எண் உள்ள லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார் Deng Pravatoudom . ஆனாலும் அவருக்கு பெரிதாக எந்த பரிசும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது முயற்சியை கைவிடாத அவர், இந்த முறை Ontario Lottery and Gaming என்ற லாட்டரி சீட்டில், மீண்டும் அதே எண் உள்ள லாட்டரி சீட்டினை வாங்கியுள்ளார்.

இந்தமுறை அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு சுமார் 60 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 340 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது. இதனால் அவரது மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இதுகுறித்து பேசிய அந்த பெண்ணின் மகன், தமது தாய் - தந்தை இருவரும் தங்கள் குடும்பத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த அதிர்ஷ்டத்துக்கு தகுதியானவர்கள்தான் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News #Mysterious news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story