சகோதரி சொன்ன கடைசி ஆசை! இறந்தாலும் நான் உன் கூடவே இருக்கணும். ... உடலை எரித்து எலும்புக்கூடுகளை இசையாக்கிய பெண்! வியக்க வைக்கும் வினோத சம்பவம்!!!
அமெரிக்காவில் சகோதரியின் கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது எலும்புகளால் விண்ட் சைம் உருவாக்கிய பெண். புதுமையான நினைவு மரியாதை கவனம் பெறுகிறது.
அமெரிக்காவின் டென்வரில், மறைந்த சகோதரியின் கடைசி விருப்பத்தை வித்தியாசமாக நிறைவேற்றிய பெண் ஒருவர் கவனம் பெற்றுள்ளார். எரின் மெரெலி என்ற இளம்பெண், தனது சகோதரியின் எலும்புகளை பயன்படுத்தி ஒரு இசைத் தோரணம் உருவாக்கியுள்ளார். தற்போது அது அவரது வீட்டில் தொங்கியபடி நினைவுகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது.
கடைசி ஆசை… கலை வடிவில் நிறைவேற்றம்
எரின் மெரெலியின் சகோதரி ஒரு திறமையான கலைஞர். மான் கொம்புகள், எலும்புகள் போன்றவற்றைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர். ஒருமுறை, தனது இறப்புக்குப் பிறகு எலும்புகளை கொண்டு நீல நிற விண்ட் சைம் செய்ய வேண்டும் என எரினிடம் கூறியிருந்தார். காற்று வீசும் போதெல்லாம் தனது நினைவுகள் இசையாக ஒலிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
நவீன தகனம்… வேறுபட்ட தேர்வு
சகோதரியின் மறைவுக்குப் பிறகு, அந்த ஆசையை நிறைவேற்ற எரின், Alkaline Hydrolysis எனப்படும் நீர் தகன முறையைத் தேர்ந்தெடுத்தார். இதில் நெருப்புக்கு பதிலாக ரசாயனம் கலந்த நீர் பயன்படுத்தப்படுகிறது. உடல் சிதைந்த பின் எலும்புகள் மட்டும் எஞ்சும். இதில் உருவாகும் திரவம் ‘திரவத் தங்கம்’ என அழைக்கப்பட்டு, செடிகளுக்கான உரமாக பயன்படுகிறது.
நினைவுகளை இசையாக்கிய முயற்சி
சகோதரியின் கண்கள் நீல நிறத்தில் இருந்ததால், அதே நிறத்தில் விண்ட் சைம் வடிவமைக்கப்பட்டது. கலைஞர் கெல்லி கில்ரனின் உதவியுடன், எலும்புத் துகள்களை கொண்டு மனித எலும்புக்கூடு போன்ற வடிவில் கைவினைப் பொருள் உருவாக்கப்பட்டது. இது காற்றில் அசையும் போது, சகோதரி அருகில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது என எரின் கூறியுள்ளார்.
வழக்கமான அடக்கம், தகனம் முறைகளைத் தாண்டி, இவ்வாறான படைப்பாற்றலான நினைவுப்பாதைகள் மக்களிடம் பரவ வேண்டும் என்பதே எரினின் விருப்பம். சுற்றுச்சூழலுக்கும் உகந்த இந்த அணுகுமுறை, பிரியமானவர்களின் நினைவுகளை அருகில் வைத்திருக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.
இதையும் படிங்க: அப்பாவுக்கு கார்னா உசுரு! அப்பாவின் சடலத்துடன் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை புதைத்த பிள்ளைகள்! அடுத்த நாளே அதிரடி காட்டிய அரசாங்கம்!!!