×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு மிக்க நன்றி... ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு மிக்க நன்றி... ரணில் விக்ரமசிங்கே

Advertisement

இலங்கையில் நடைப்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இக்கட்டான தருணத்தில் உதவிய இந்தியாவுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

இலங்கைக்கு ஒரு வலுவான மற்றும் பரஸ்பரம் அதிக பயனுள்ள நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி செய்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது.

இத்தகைய இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கியது. எனவே எனது மக்கள் சார்பாகவும் மற்றும் எனது சொந்த அடிப்படையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srilanka #pm modi #India #thanks
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story