அய்யோ... இப்படி கூட உயிர் போகுமா? காதலி 136 கிலோ... காதலன் 54 கிலோ..! சோபா மீது படுத்திருந்த காதலன் மீது பாய்ந்த வந்து காதலி! அவ்வளவு தான்... உயிரே போச்சு! பகீர் சம்பவம்..!!!
அமெரிக்காவில் காதலர்களுக்கிடையேயான தகராறு விபரீதமாக முடிந்தது. காதலன் மீது அமர்ந்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்த வழக்கில் பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் எதிர்பாராத விதமாக உயிரிழப்பில் முடிந்துள்ளது. உடல் எடையில் பெரும் வித்தியாசம் கொண்ட ஜோடிக்கிடையே நடந்த தகராறின் போது, விண்டி தாமஸ் தனது காதலன் மீது அமர்ந்ததாக கூறப்படும் நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்தார். பல ஆண்டுகள் நீண்ட நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிக்கு தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியது
அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான கீனோ பட்லர் சுமார் 54 கிலோ எடை கொண்டவர். அவர், 136 கிலோ எடை கொண்ட விண்டி தாமஸுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 2018 மார்ச் 18 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்து கைகலப்பாக மாறியது.
தகவலின்படி, ஆத்திரமடைந்த விண்டி தாமஸ் தனது காதலன் மீது பாய்ந்து அமர்ந்துள்ளார். இதனால் கீனோ பட்லரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
மருத்துவ அறிக்கையில் வெளியான தகவல்
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட கீனோ பட்லர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அதிக அழுத்தமே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சமூக வலைதள விவாதம்
உயிரிழப்பு தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விண்டி தாமஸ் மீது விசாரணை நடத்தப்பட்டது. நீண்டகால நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அவருக்கு 18 ஆண்டுகள் முதல் 36 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், காதலர்களுக்கிடையேயான வன்முறை எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய் - மகள் இடையேயான படுக்கை தகராறு! இறுதியில் குடும்பத் தலைவனுக்கு விபரீதமாக முடிந்தது.... போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி...!!!