#BigBreaking: உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ..!
#BigBreaking: உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ..!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்றுள்ள நிலையில், இருநாட்டு இராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டையில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ரஷியா தரப்பில் இராணுவ ரீதியிலான வீரர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷியா பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைனின் மீது போர்தொடுத்து சென்றதால் ரஷியாவின் மீது பல நாடுகள் பல்வேறு தடையினை விதித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் உள்ள பல்வேறு பகுதியில் மெட்ரோ இரயில் நிலைய சுரங்கம் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மாணவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய மாணவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தூதரக அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம், தூதரக அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை செய்து தகவல் தெரிவிப்பார்கள். சுயமாக உக்ரைனின் அண்டை நாட்டின் எல்லைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் உள்ள ஷேஹினி எல்லைப்பகுதிக்கு வந்த இந்திய மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி, அவர்களை மீண்டும் உக்ரைனுக்குள் செல்ல அதிகாரிகள் துன்புறுத்துவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. வீடியோ குறித்த உண்மை நிலவரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362