×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களே உஷார்...நாய்க்குட்டி நக்கியதால் நடந்த உயிர் போராட்டம்! 6 முறை நின்று துடித்த இதயம்..... கை, கால்களையும் இழந்த பெண்! அதிர்ச்சி சம்பவம் !!!

இங்கிலாந்தில் நாய் நக்கிய சிறு காயம் காரணமாக 52 வயது பெண்ணுக்கு செப்சிஸ் ஏற்பட்டு, 32 வார போராட்டத்திற்குப் பிறகு இரு கைகள், இரு கால்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சிறிய காயம் கூட உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கான அதிர்ச்சிகரமான உதாரணம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. செல்லப் பிராணிகளுடன் விளையாடும் போது கூட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.

நாய் நக்கிய காயம் – உயிர் போராட்டம்

இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான மஞ்சித் சங்கா, 2025 ஜூலை மாதம் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் இருந்த சிறிய காயத்தை நாய் நக்கியுள்ளது. ஆரம்பத்தில் அது சாதாரணமாக தோன்றியிருந்தாலும், சில நாட்களிலேயே அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு செப்சிஸ் (Sepsis) எனப்படும் ரத்த நச்சு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலைமையில் அவரது இதயம் ஆறு முறை நின்று மீண்டும் துடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து 32 வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கண்ணில் கடுமையான அரிப்பு, எரிச்சலால் டாக்டரிடம் சென்ற 66 வயது பெண்! இரு கண் இமையிலும் 250 க்கு மேல்.....பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கைகள், கால்கள் அகற்றப்பட்ட துயரம்

உயிர் பிழைத்தாலும், இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரது இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அவர் வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இந்த அனுபவம் குறித்து கண்ணீருடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர்களின் எச்சரிக்கை

செல்லப் பிராணிகளின் எச்சிலில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்களில் படும்போது தீவிர தொற்றை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.

"இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சிறிய காயம் என்றாலும் அதை அலட்சியம் செய்யாதீர்கள்," என்று மஞ்சித் சங்கா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறு கவனக்குறைவால் பெரிய விளைவுகள் ஏற்படலாம் என்பதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுகிறது. செல்லப் பிராணிகளை நேசிப்பது நல்லது தான்; ஆனால் உடல்நல பாதுகாப்பில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம்.

 

இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா... நம்பவே முடியல! பல் துலக்கும்போது கழுத்தில் உள்ள ரத்த குழாய் வெடித்து, ரத்தம் பீய்ச்சி அடித்து.... அனைவரையும் அதிர வைத்த சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sepsis #செப்சிஸ் #Dog Infection #ரத்த நச்சு #UK News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story