×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு குடும்பத்தின் கதையை முடித்த பல்லி... நைஜீரியாவில் சோகம்..!

ஒரு குடும்பத்தின் கதையை முடித்த பல்லி... நைஜீரியாவில் சோகம்..!

Advertisement

நைஜீரியாவில் ஓகுன் மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜோன்ஸ் சாமுவேல் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இவர்கள் நான்கு பேருடன் சேர்ந்து உறவினர்கள் இருவரும் இரவு உணவு உட்கொண்டுவிட்டு  உறங்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலை வெகு நேரமாகியும் ஜோன் சாமுவேல் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இரவு உணவு உண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்ததாகவும், உணவில் விஷம் கலந்து இருப்பதே மரணத்திற்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சாமுவேலின் வீட்டை சோதனை செய்ததில் அவர்கள் இரவு உணவிற்கு எடுத்துச் சென்ற சூப் பானையில் பல்லி இறந்து கிடந்ததாகவும் அந்தப் பல்லி தான் அவர்களின் மரணத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nigeria #Lizard #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story