நடைப்பாதையில் சண்டையிட்டு கொண்ட இரண்டு எலிகள்! புகைப்படம் எடுத்த நபருக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
Rats fighting

லண்டனில் சுரங்கப்பாதை வழியாக சாம் ரவுலி என்ற நபர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இரண்டு எலிகள் சண்டையிட்டு கொண்ட இருந்துள்ளன. உடனே அவர் அந்த அரிய காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார்.
அவர் சாதாரணமாக எடுத்த புகைப்படத்திற்கு அவருக்கு மிகப்பெரிய விருதான Wildlife Photographer விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. தற்போது அப்புகைப்படத்தை லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அருமையான புகைப்படம். இரண்டு எலிகள் சண்டையிட்டு கொள்வதை இப்போது தான் பார்க்கிறோம். புகைப்படம் எடுத்த அந்த கலைஞருக்கு எங்களது வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.