×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடும் ஆக்ரோஷத்தில் இருந்த பாம்பு.. கையில் பிடித்த இளைஞர்.. திடீரென கண்ணை கொத்தியது... ஷாக்கிங் வீடியோ..

பாம்பு ஒன்று இளைஞரின் கண்ணை தாக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

பாம்பு ஒன்று இளைஞரின் கண்ணை தாக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயம்தான் காரணம். ஆனாலும் சிலர் அத்தகைய கொடிய பாம்புகளையே கையில் வைத்து சாகசம் காட்டுவதையும் நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

அந்தவகையில் நிக் என்ற இளைஞர் ஒருவர் பெரிய மலைப்பாம்பு ஒன்றை கையில் வைத்து சாகசம் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக மாறி, அவரது கையில் கடிக்கிறது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் நிக் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில் மேலும் ஆக்ரோஷமான அந்த பாம்பு இந்தமுறை அவரது கண்ணை தாக்கியது. இதனால் உடனே நிக் அந்த பாம்பை கீழே போட்டுவிட்டு, அவரது கண்ணை பார்த்தபோது, அந்த பாம்பு அவரது கண்ணின் மேல் பகுதியிலிருந்து ரத்தம் வழிகிறது. பின்னர் இரத்தம் வழியும் முகத்துடன் நிக் மீண்டும் அந்த பாம்பை கையில் வைத்து பேச தொடங்குகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snake #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story