×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனோவால் இறந்தவர்கள்! காரில் இருந்த 2 சவப்பெட்டிகள்! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Police found drugs in coffin at brazil

Advertisement

பிரேசிலின் மடோக்ராஹோ டி சுலா மாகாணத்தில் பொன்டா போரா என்ற பகுதியில் போலிசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது  அவ்வழியாக வந்த காரை மறித்த போலீசார், கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அப்பொழுது அவர் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எடுத்துசெல்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் போலீசார்கள் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படியும், உயிரிழந்தவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர் தடுமாறியவாறு,  முன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார்கள் காரில் இருந்த இரண்டு சவப்பெட்டிகளையும் திறந்து பார்த்துள்ளனர். அதன் உள்ளே  290 கிலோ போதைப்பொருட்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த கார் டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும்  போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#coffin #arrest #drugs
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story