×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாயமான விமானம் மலையில் மோதி விபத்து..! பயணிகளை தேடும் பணியில் இராணுவம்..!

மாயமான விமானம் மலையில் மோதி விபத்து!..பயணிகளை தேடும் பணியில் ராணுவம்..!

Advertisement

நேபாளத்தில் மாயமான விமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.

நேபாளத்தில் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காத்மண்டு, நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து நேற்று காலை தாரா ஏர்  விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கானாமல போனது.விமானத்தில் மொத்தம் 22 பேர் பயனித்தனர்.

விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா? விமானத்தின் நிலை என்ன? என்பது பற்றி மலைப்பகுதியில் நேபாள ராணுவத்தினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கானாமல் போன விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை நேபாள ராணுவம் இன்று கண்டுபிடித்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன? யாராவது உயிருடன் இருக்கிரார்களா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nepal #Plane Crash #Crash on Hills #Army Found plane
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story