×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிலையுடன் செல்பி எடுக்க சென்ற நபருக்கு ஒரு நொடியில் காத்திருந்த அதிர்ச்சி..!! வைரலாகும் வீடியோ..

சிலையுடன் செல்பி எடுக்க சென்ற நபருக்கு ஒரு நொடியில் காத்திருந்த அதிர்ச்சி..!! வைரலாகும் வீடியோ..

Advertisement

சிலையென நினைத்து உண்மையான முதலையின் வாயில் சிக்கி தப்பித்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட சம்பவமானது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது. Nehemias Chipada என்ற நபர் தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுடன் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். பூங்காவில் இருந்த சிலைகளுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்த அவர், அருகில் இருந்த குளம் ஒன்றில் முதலை சிலை இருப்பதை பார்த்துள்ளார்.

உடனே குளத்திற்குள் இறங்கி முதலை சிலையுடன் செல்பி எடுக்க முயன்ற அவருக்கு அப்போதுதான் தெரிந்தது அது சிலை இல்லை, உண்மையான முதலை என்று. முதலை அவரை கவ்வி இழுத்து செல்ல முற்பட்டபோது, அந்த நபர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த வீடியோ காட்சியான தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #Selfie with Crocodile
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story