×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தினால் இளைஞர்களுக்கு மாரடைப்பு அபாயம்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!

இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தினால் இளைஞர்களுக்கு மாரடைப்பு அபாயம்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!

Advertisement

 

மடோர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திய 18 வயது முதல் 39 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸை தடுக்க மக்களுக்கு முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. பின் நாட்களில் கொரோனா தடுப்பூசியும் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உலக அளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இதில், இந்தியா சார்பில் கோவாக்சின் தடுப்பூசி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். கோவிட்ஷீல்டு தடுப்பூசி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு அனுமதியோடு சீரம் நிறுவனத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தயார் செய்யப்படுகிறது. 

இதனைப்போல உலக அளவில் பல்வேறு தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பைசர் மற்றும் மடோனா தடுப்பூசி mRNA வகை தடுப்பூசிகள் என்று கூறப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்திய டாக்டர் ஜோசப் தெரிவிக்கையில், mRNA வகை தடுப்பூசிகளால் 18 வயது முதல் 39 வயது உட்பட்ட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திய 28 நாட்களுக்குள் இதய நோய் தொடர்பான இறப்புகள் ஏற்படுகிறது என்று கூறுகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #Moderna #Pfizer #Corona vaccine #heart attack #கொரோனா #மாரடைப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story