கடுமையான நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்.. கடன் தர மறுக்கும் உலக வங்கி..இது தான் காரணமா..!
நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்.. கடன் தர மறுக்கும் உலக வங்கி..!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நிலையில் உலக வங்கி வழங்குவதாக இருந்த கடனை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சுமார் ஒரு பில்லியன் டாலர் கடன் தொகையை பாகிஸ்தானுக்கு வழங்க உலக வங்கி முன்வந்தது.
ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகளால் உலக வங்கியானது கடன் தருவதை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து தங்களது நாட்டை காப்பாற்றுவதற்காக இந்தியாவிடம் மீண்டும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த அழைப்புவிடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவு துறை வட்டாரமானது தீவிரவாதத்தை முழுவதுமாக கைவிடும் வரை பாகிஸ்தானுடன் எந்த உறவையும் மேம்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362