கொரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்கும் போது மருத்துவர்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! பாகிஸ்தானில் பரபரப்பு!
pakistan people dmaged hospital
பாகிஸ்தானில் கொரோனா நோயாளி ஒருவர் இறந்ததையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், ஒரு கும்பல் ஒன்று கராச்சி மருத்துவமனையில் மருத்துவர்களை அடித்து உதைத்ததோடு மருத்துவமனை பொருட்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கராச்சியில் உள்ள இந்த மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வந்திருப்பது உறுதியானது.
ஆனால் இறந்தவர்களின் உறவினர்களோ அவர் சாதாரணமாக தான் இருந்தார். கொரோனா அறிகுறியெல்லாம் எதுவும் இல்லை என கூறி மருத்துவர்களிடம் கோபமடைந்தனர். ஒருகட்டத்தில் 70 பேர் மருத்துவமனைக்குள் புகுந்தனர். உடலை வலுக்கட்டாயமாக கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் மருத்துவமனை பொருட்கள், மருத்துவ வாகனங்களை அடித்து நொறுக்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு பாகிஸ்தானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 69,500-ஐ தாண்டியுள்ளது. கொரோனாவால் 1483 பேர் பாகிஸ்தானில் பலியாகியுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362