×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது.. அந்நாட்டு அமைச்சர் தகவல்..!

பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது.. அந்நாட்டு அமைச்சர் தகவல்..!

Advertisement

மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தானில் நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

லாகூர், பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையால் கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர், என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில்  பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். வெள்ளம் ஒரு பெரிய கடல் போல பரவி உள்ளதாகவும், வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு வறண்ட நிலம் கூட இல்லை என ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #One third of Pakistan #Submerged in water #minister #Informed
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story