×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூமியில் மோத தயாராகிறது அமெரிக்காவின் செயற்கைகோள்; நாசா அறிவிப்பு.!

பூமியில் மோத தயாராகிறது அமெரிக்காவின் செயற்கைகோள்; நாசா அறிவிப்பு.!

Advertisement

 

தனது வாழ்நாட்களை முடித்துக் கொண்ட செயற்கைக்கோள் நாளை பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிக்கும், புவியின் மாறுதல்களை கணிக்கவும் உலக நாடுகள் பல காலகட்டங்களில் தொடர்ந்து செயற்கைக்கோள்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை தனது ஆயுட்காலம் முடிந்ததும் விண்ணில் செயலிழந்து சுற்றுகிறது. சில பூமிக்குள் விழுந்து அழிவை ஏற்படுத்துகிறது. 

இந்த நிலையில், பூமியின் கதிரியக்க ஆற்றல் தொடர்பாக ஆய்வு செய்ய 1984ல் அமெரிக்கா செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. அந்த செயற்கைக்கோள் தற்போது பணியை முடித்துக் கொண்டு செயலற்று போனது. 

இதனால் அந்த செயற்கைகோள் நாளை பூமியில் விழலாம் என நாசா தெரிவித்துள்ளது. காலை 05:10 மணியளவில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்றும், அது வளிமண்டலத்தில் நுழையும் போது முற்றிலும் இருந்து பூமியில் மோதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NASA #satellite #world #Earth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story