×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மியான்மரில் அதிபயங்கர நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!

மியான்மரில் அதிபயங்கர நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!

Advertisement

 

பர்மாவில் இன்று அதிகாலை 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உலகம் முழுவதும் நிலநடுக்கம் என்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தே காணப்படுகிறது. இந்தோனேசியா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வழக்கத்திற்கு மாறான நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

சமீபத்தில் இந்தோனேஷிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை கடந்து இருந்தது. இந்த நிலையில், மியான்மர் நாட்டில் அதிகாலை 03:52 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில் (பர்மா) வடமேற்கு திசையில் 162 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அம்மாநில தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகள் & கட்டிடங்கள் குலுக்கத்தால் பதறியபடி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Myanmar #tamilnadu #earthquake #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story