பெரும் அதிர்ச்சி! குடும்பமே நள்ளிரவில் சாப்பிட்ட தர்பூசணி! அதிகாலையில் திடீர் வாந்தி, மயக்கம்.... சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி! நடந்தது என்ன..? மும்பையை உலுக்கிய பயங்கரம்..!!!
மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
மும்பை பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல். மருத்துவமனையில் சேர்த்தும் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. போலீசார் காரணத்தைத் தேடி விசாரணை தொடங்கியுள்ளனர்.
நள்ளிரவில் சாப்பிட்ட பழம்... அதிகாலையில் உடல்நலம் பாதிப்பு
பைதோனி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), மனைவி நஸ்ரீன் (35), மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். தகவலின்படி, சில மணி நேரங்களிலேயே அதிகாலை நேரத்தில் அவர்களுக்கு கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. ஒரே வீட்டில் நால்வரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டதால் அருகிலுள்ளவர்கள் பதற்றமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி... சிகிச்சை பலனின்றி மரணம்
இதையடுத்து, குடும்பத்தினரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், ஒருவருக்கொருவர் என நால்வரும் உயிரிழந்தனர். குறுகிய நேரத்தில் நடந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஷத்தன்மை சந்தேகம்... போலீஸ் தீவிர விசாரணை
இந்த மரணம் விஷம் கலந்த உணவால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பதில் தெளிவு இல்லை. குறிப்பாக, அவர்கள் சாப்பிட்ட தர்பூசணியில் ஏதேனும் விஷத்தன்மை இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு உயிரிழந்தது மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.