×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு மருத்துவமனையில் அட்டூழியம்.! ஊசி போட அழைத்து செல்லப்பட்ட 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

minor girl raped by hospital ward boys in uttara pradesh

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் அரசு டிபி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில்17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு இரவு மருத்துவமனை  ஊழியர் சிவானந்தன் என்பவர், ஆண்ட இளம்பெண்ணிடம் உங்களுக்கு ஊசி போட வேண்டும், கீழே உள்ள அறைக்கு வாங்க என கூறியுள்ளார்.

உடனே அந்த பெண் தனது அம்மாவையும் அழைத்து வருவதாக  கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ஊசி போட்டதும் வந்துவிடலாம்,  அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி அழைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கீழே உள்ள அறைக்கு  அழைத்துச் சென்ற சிவானந்தம் அவருக்கு மாத்திரை ஒன்றை கொடுத்து சாப்பிட கூறியுள்ளார்.

மேலும் அதனை சாப்பிட்டதும் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து சிவானந்தனும் அவருடன் மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு ஊழியரான விஷால் என்பவரும் அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் மயக்கம் தெளிந்ததும், தனக்கு நடந்த அவலத்தை உணர்ந்த அவர் இதுகுறித்து கதறியபடி தனது தாயிடம்  கூறியுள்ளார். உடனே பெண்ணின் தாயார் இந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவ ஊழியர்கள் இருவரையும்  கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sex abuse #uttara pradesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story