போதைப்பொருள் கடத்தல் கும்பல் சண்டை.. அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழப்பு.!
போதைப்பொருள் கடத்தல் கும்பல் சண்டை.. அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழப்பு.!
மெக்சிகோவில் உள்ள குவாஜுவாடே மாகாணத்தில், சிலாவ் கிராமத்தில் 6 பேர் கொண்ட குடும்பத்தினர், தங்களின் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் வீட்டில் சடலமாக மீட்டனர்.
வீட்டில் இருந்த 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என அனைவரும் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த மர்ம படுகொலைகள் குறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், கடந்த நான்கு மாதத்தில் இது 5 ஆவது தாக்குதல் என்றும் தெரிவிக்கின்றனர்.
குவாஜுவாடே மெக்சிகோவின் மத்திய மாகாணங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில், கடத்தல் - போதைப்பொருள் இடையே நடக்கும் சண்டையால் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் வருடம் முதல் அந்நாட்டு இராணுவம் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362