உன்னோட வயசு என்ன? ரூம் போடட்டுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு வேணும்.... பெண் பயணியிடம் அந்த இடத்தில் கையை நீட்டி அத்து மீறிய கேப் டிரைவர்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
மலேசியாவில் பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது. வீடியோ வைரலானதால் கடும் நடவடிக்கை.
மலேசியாவில் வாடகை காரில் பயணித்த பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓட்டுநருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அந்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அவரது உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவும் மக்கள் அதிர்ச்சியும்
ஜோகூர் பாரு நகரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், ஓடும் காரிலேயே ஓட்டுநர் பெண் பயணியிடம் தரக்குறைவான முறையில் பேசுவதுடன், உடலைத் தொட முயன்றுள்ளார். இந்த காட்சிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், ஓட்டுநர் தனது கையை பெண்ணின் தொடை அருகே நீட்டியபடி, அவரது வயது குறித்து கேட்டு, ஒரு அறையில் தங்க பணம் எவ்வளவு தர வேண்டும் என அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் அழுதபடியே தன்னை மறைத்துக்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: கணவரை இழந்த மனைவிக்கு 7 வயது சிறுவன்! தாயை காதலித்து திருமணம் செய்த நபர் 13 நாட்களிலே சண்டை..... கோபத்தில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!
அரசின் அதிரடி நடவடிக்கை
இந்த சம்பவத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் பொதுச் சேவை வாகன உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இனி அவர் எந்த ஒரு e-hailing சேவையிலும் பணியாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
கேப் நிறுவனத்தின் முடிவு
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அந்த ஓட்டுநரை தங்களது செயலியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதாக கேப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், அனைத்து e-hailing நிறுவனங்களும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டங்களை சமர்ப்பிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற அநாகரீகச் செயல்களுக்கு இனி எந்தவித சலுகையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.