காதலியை கொன்று, தாய்க்கு விருந்தளித்த காதலன்! வெளியான நடுநடுங்கவைக்கும் அதிர்ச்சி காரணம்!
lover killed girl friend
ஆப்பிரிக்கா நைஜீரியா பகுதியை சேர்ந்தவர் போலா அடீகோ. இவரது மகன் 23 வயது நிறைந்த ஓவொலாபி. இவர் டேலி-ஓல்டேலி என்ற 22 வயது நிறைந்த பெண்ணை கவர்ந்து காதலித்து வந்துள்ளார். பின்னர் அவரை ஏமாற்றி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டேலியை போதைக்கு அடிமையாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் டேலியின் உடலை 40 வயது நிறைந்த பாதிரியார் பிலிப் சுயமாக நடத்தும் தேவாலயத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஓவொலாபி மற்றும் பிலிப் இருவரும் சேர்ந்து டேலியின் தலையை நொறுக்கி அவரது உடலை துண்டு துண்டாக்கியுள்ளனர். பின்னர் பாதிரியார் பிலிப், ஓவொலாபி நீ பணக்காரனாக வேண்டும் என்றால், டேலியின் இறைச்சியை சமைத்து சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் அதனை கேட்ட அவர் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளார்.மேலும் அதனை தனது தாய் போலாவிற்கும் விருந்தளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் லோகோஸ் மாநில பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கடைசி ஆண்டு படித்து வந்த தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த உண்மைகள் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் ஓவொலாபி அவரது தாய் மற்றும் பிலிப் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் சடங்கில் ஆட்டு செய்ததாக கூறியே இருவரும் என்னை சாப்பிட வைத்தனர். அது டெல்லியின் இறைச்சி என தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.