×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி.! ஊரடங்கு உத்தரவை உடைத்தெறிந்த காமம்.!

London couple are caught having relationship at St James park

Advertisement

கொரோனா வைரஸ் காரணமாக நாடே ஊரடங்கில் இருக்கும்போது, யாரையும் கண்டுகொள்ளாமல் காதல் ஜோடி ஓன்று பட்டப்பகலில் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டையும் விட்டுவைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர், இளவரசர் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் இங்கிலாந்திலும் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால், மக்கள் உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் சில விதிமுறைகளுடன் சிறிதுநேரம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட சிறிது நேரத்தில் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே உள்ள செயின்ட் ஜேம்ஸ் என்ற பிரபல பூங்கா ஒன்றில் காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளது.

பட்டபகலில், மக்கள் நடந்துசெல்லும் பூங்காவின் நடைபாதையில் யாரையும் கண்டுகொள்ளாமல் அந்த காதல் ஜோடி சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அந்த வழியாக குதிரையில் வந்த பாதுகாப்பு வீரர்கள் காதல் ஜோடியின் அத்துமீறலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் அருகில் சென்ற காவலர்கள் அவர்களை கைது செய்யாமல், சமூக இடைவெளி தேவை என அறிவுரை கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளனர். இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற ஒருவர் புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட தற்போது இந்த சம்பவம் உலகளவில் வைரலாகிவருகிறது.

இதேபோன்று கடந்த வாரம் லண்டனில் உள்ள உட்லண்ட்ஸ் பூங்காவில் இதேபோன்று காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டதும், அங்கே நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அவர்களை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #london
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story