×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் இருந்து மளிகை கடைக்கு சென்ற ஏழைப்பெண் வரும்போது பணக்காரியான அதிசயம்..! செம மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.!

Kanada women won 50 thousands america dollar in lottery

Advertisement

கனடாவில் சுரண்டல் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய இளம்பெண் ஒருவருக்கு பெரிய அளவில் பரிசு கிடைத்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (British Columbia) உள்ள ரிச்மண்ட் நகரை சேர்ந்தவர் இளம் பெண்ணான யான் லி வு. இவர் அங்கு விற்கப்படும் சுரண்டல் லாட்டரி சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக யான் லி வு கடைக்கு சென்றுள்ளார்.

மளிகை பொருட்கள், காய்கறி அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப முயற்சித்த நபர் தான் வாங்கியிருந்த லாட்டரி சீட்டிற்கான முடிவுகள் வெளியாகியிருப்பதை பார்த்து, தனது லாட்டரி சீட்டை எடுத்து பார்த்துள்ளார். அப்போது யான் லி வு வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக விழுந்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 37 லட்சம். இதுகுறித்து கூறியுள்ள யான் லி வு தனது சந்தோசத்தை அதே இடத்தில் கத்தி கூச்சலிட்டு கொண்டாடவேண்டும் என ஆசையாக இருந்தது. ஆனால், எனது ஆசையை அடக்கிக்கொண்டு தனது வீட்டில் வந்து எல்லோரிடமும் கூறி சந்தோசப்பட்டதாக கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lottery
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story