வெளிச்சத்துக்கு வந்த உண்மை....175 அப்பாவி பள்ளி குழந்தைகள் பலியான கொடூரத்தில் அமெரிக்கா சொன்ன பொய்....சிக்கிய ஏவுகணை ஆதார வீடியோ காட்சி!!!
தெற்கு ஈரானின் மினாப் நகரில் பள்ளி மீது நடந்த தாக்குதலில் 175 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா விளக்கத்திற்கு முரணான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் ராணுவ மோதல்கள் பல்வேறு மனிதாபிமான பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ஈரானின் மினாப் நகரில் பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மினாப் பள்ளி தாக்குதல் சம்பவம் பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பி, சர்வதேச அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
பள்ளி மீது வான்வழித் தாக்குதல்
தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரா தயாபா பெண்கள் தொடக்கப் பள்ளி மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 175 சிறுமிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி, உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. பள்ளி வளாகமே பெருமளவில் சேதமடைந்த நிலையில், இந்த சம்பவம் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் ஆரம்ப விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட விளக்கத்தில், இது ஈரானின் தரம் குறைந்த ஏவுகணைகள் தவறுதலாக தாக்கியதாக கூறப்பட்டது. அமெரிக்க ராணுவம் ஒருபோதும் பள்ளி குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தாது என்றும், இந்த சம்பவத்துடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: வேகமாக ஓடுங்க....சைடுல போங்க! கத்தாரில் விழுந்த வெடித்த ஏவுகணை! "ஓ மை காட்" இந்தியர் அலறல் சத்தம்... திக் திக் காட்சி!!!
செயற்கைக்கோள் ஆதாரங்கள் வெளிச்சம்
ஆனால் பின்னர் வெளியாகிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இந்த விளக்கத்திற்கு முரணாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பள்ளி கட்டிடத்தை தாக்கியது டோமாஹாக் ஏவுகணை வகையைச் சேர்ந்த குரூஸ் மிசைல் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துல்லியமான தாக்குதல் ஆயுதங்களில் ஒன்றாகும்.
இலக்கு தவறிய தாக்குதல்?
ஆய்வு அறிக்கைகளின் படி, ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படைத் தளத்தை இலக்காக வைத்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கு தவறி அருகில் இருந்த பள்ளி மீது விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும் சில பாதுகாப்பு வல்லுநர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மனிதாபிமான கோணத்தில் உலக நாடுகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன. அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.