×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த ஒரு காரணத்திற்க்காக விமானத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கி மனைவியுடன் தனியாக பரந்த நபர்.. செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

கொரோனாவுக்கு பயந்து நபர் ஒருவர் விமானத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

Advertisement

கொரோனாவுக்கு பயந்து நபர் ஒருவர் விமானத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கி, தனி ஆளாக தனது மனைவியுடன் விமானத்தில் பயணித்த  சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

சீனாவின் உஹான் நகரத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பலலட்சம் மக்கள் இந்த கொடிய வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் இந்த கொரோனாவால் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது.

கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் சக பயணிகளுடன் விமானத்தில் சென்றால் தனக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்திலும், பாதுகாப்பு கருதியும் இந்தோனேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் விமானம் ஒன்றின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து தனது மனைவியுடன் பாலி என்ற பகுதிக்கு புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளார்.

இதற்காக அவர் செலவு செய்த தொகை IDR75 million (S$7,010) to IDR 110 எனவும் இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story