படிக்க சென்ற இந்திய இளைஞருக்கு நேர்ந்த பெருந்துயரம்!! துடிதுடித்து கதறிய பெற்றோர்கள்!!
india student dead in australia
இந்தியாவை சேர்ந்தவர் போஷிக் சர்மா, 21 வயது நிறைந்த அவர் ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் நகரில் தங்கியிருந்துள்ளார். மேலும் அங்குள்ள பல்கலைக்கழம் ஒன்றில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்டோரியா மாகாணம், மேரிஸ்விலி பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு விடுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையடைந்த சர்மா உடனே அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார். ஆனால் போஷிக் சர்மா தான் தங்கியிருக்கும் பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விக்டோரியா மாகாண போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார்கள் சர்மாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மேரிஸ்விலி பகுதியின் புறநகரில் உள்ள முட்புதர் ஒன்றில் சர்மா இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சர்மாவின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி சர்மா எவ்வாறு இறந்தார் எனவும் போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.படிக்க சென்ற தனது மகன் உயிரிழந்த நிலையில் சடலமாக நாடு திரும்புவதை கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362