×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோர சம்பவம்.. 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 7 பேர் பலி..!

கோர சம்பவம்.. 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 7 பேர் பலி..!

Advertisement

அமெரிக்காவில் லூசியான நகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதோடு காட்டுத்தீயால் ஏற்பட்ட புகையும் சேர்ந்து கொண்டு சாலையில் வாகனங்கள் செல்வது கூட தெரியாத சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் லூசியானா நகரில் கடும் பனிப்பொழிவின் காரணமாக 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 25க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பனிப்பொழிவின் காரணமாக சாலையில் 10 அடிக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்து ஏற்பட்ட பாலமானது உடனடியாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மூடப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#America #Road accident #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story