பனிப்புயலை தொடர்ந்து அமெரிக்காவை மிரட்டும் கனமழை...வீடுகளை சூழ்ந்த வெள்ளம்...!!
பனிப்புயலை தொடர்ந்து அமெரிக்காவை மிரட்டும் கனமழை...வீடுகளை சூழ்ந்த வெள்ளம்...!!
கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் வேரோடு மரங்கள் சாய்ந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசியதை தொடர்ந்து அந்நாட்டின் பல மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து கிடந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் மழை என அமெரிக்காவை இயற்கை புரட்டி போட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362