கடும் பனிமூட்டம்.. 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து... சீனாவில் பரபரப்பு..!
கடும் பனிமூட்டம்.. 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து... சீனாவில் பரபரப்பு..!
சீனாவில் கெனான் மாகாணத்தில் உள்ள செங்சுவு நகரில் மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் இந்த விபத்தானது சாலையில் சூழ்ந்துள்ள பனிமூட்டத்தால் கார்கள் மற்றும் லாரிகள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.. இதனையடுத்து இந்த விபத்து குறித்த வீடியோக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362