பாரம்பரிய உடையணிந்து பியர் குடித்து கொண்டாடிய மக்கள்.. கலக்கல் திருவிழா.!
பாரம்பரிய உடையணிந்து பியர் குடித்து கொண்டாடிய மக்கள்.. கலக்கல் திருவிழா.!
ஜெர்மனி நாட்டின் மிகவும் புகழ்பெற்ற பியர் திருவிழா இன்று உற்சாக கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது.
ஜெர்மனி நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பியர் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று மிக விமர்சையாக மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் பாரம்பரிய உடையணிந்த மக்கள் பலரும், பல கலை நிகழ்வுகளில் கலந்துகொண்டு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், பியர் திருவிழாவிற்கு பெயர்போன நகரமான முனிச் நகரில், நகர மேயர் பியர் திருவிழாவினை தொடங்கி வைத்துள்ளார். அப்போது மது பிரியர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் ஆரவாரத்துடன் மது அருந்தத் தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடப்பதால் பல நாடுகளிலிருந்தும் 60 லட்சம் பேர் வரை ஒன்று கூடலாம் இன்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362