×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள்... முடிவு செய்த ஜி 7 நாடுகளின் தலைவர்கள்..!!

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள்... முடிவு செய்த ஜி 7 நாடுகளின் தலைவர்கள்..!!

Advertisement

"ஜி 7" நாடுகளின் தலைவர்கள், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க முடிவு செய்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது நடத்தி வரும் போர் ஓரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா, உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 487 கோடி) நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.

டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் கலந்து கொண்டு பேசியபோது இதுகுறித்து அவர் பேசுகையில், ரஷிய படையெடுப்பின் கீழ் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. 
ரஷிய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை. எனவே இந்த நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. 

இந்நிலையில் போர் ஓரு வருடம் நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன் என்று ஜப்பான் பிரதமர் கூறி இருந்தார். 

இந்நிலையில் உக்ரைன் போர் ஓரு வருடம் முடிவடைந்ததை‌ ஒட்டி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையில் "ஜி 7" நாடுகள் தலைவர்களின் மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், "ஜி 7" நாடுகளின் தலைவர்கள், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#G7 Countries #G7 Leaders #russia #Ukrine
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story