நடுங்க வைக்கும் காட்சி...! ஒரு ஊரையே சூறையாடிய சூறாவளி.! காற்றில் கண்டமேனிக்கு பறந்த கார்கள், வீடுகள்...! ஒட்டுமொத்த கிராமமே இருட்டில் தவிக்குது... ஷாக் வீடியோ.!!!
தெற்கு பிரான்ஸின் போமாஸ் கிராமத்தை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 39 பேர் காயமடைந்தனர். 300 வீடுகள் சேதமடைந்து, 1,400 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள போமாஸ் கிராமத்தை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1,000 பேர் வசிக்கும் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
300 வீடுகள் சேதம்; வாகனங்களும் நாசம்..
சூறாவளியின் வேகத்தால் ஏராளமான வீடுகளின் கூரைகள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்தன. பல கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் காணாமல் போனதாக தகவல் இல்லை என்றாலும், மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்காக அவசரகால தங்குமிட மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், அவுட் மாகாணத்தில் சுமார் 1,400 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் தங்குமிட வசதியின்றி மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
100 கி.மீ. வேகத்தை கடந்த காற்று
சூறாவளி தாக்கிய நேரத்தில் அந்தப் பகுதி இடியுடன் கூடிய கனமழைக்கான எச்சரிக்கையின் கீழ் இருந்தது. அருகிலுள்ள வானிலை ஆய்வு நிலையத்தில் மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியது பதிவாகியுள்ளது. அதிகாரிகள் தற்போது சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர்.
சைக்கிள் பந்தயமும் பாதிப்பு
மோசமான வானிலையின் தாக்கம் அன்றாட வாழ்க்கையுடன் விளையாட்டு நிகழ்வுகளிலும் எதிரொலித்தது. தெற்கு பிரான்ஸில் நடைபெற்ற பிரபல சைக்கிள் பந்தயத்தின் திங்கள்கிழமை மூன்றாம் கட்டம் ஆலங்கட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
பிரான்ஸில் ஆண்டுதோறும் சில பத்துக்கும் மேற்பட்ட சூறாவளிகள் ஏற்படுவதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு அமைப்பான மெட்டியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குறைந்த தீவிரம் கொண்டவை என்றாலும், போமாஸில் ஏற்பட்ட சூறாவளி குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் சேத மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பட்டம் விட்ட 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! 4 நாட்களுக்குப் பின் பெற்றோற்கு காத்திருந்த அதிர்ச்சி....!!!