50 கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழப்பு! கதறும் உறவினர்கள்! பகீர் சம்பவம்!!
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 50 க
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 50 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகரம் சிரியாவில் உள்ள அல் ஹூசைன் மருத்துவமனையில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த வார்டில் 63 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 50 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மீதமுள்ள நோயாளிகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பலியானவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362