×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அசந்து தூங்கிய இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்! நியூஸ் பேப்பரை மறைத்து மறைத்து செய்த அசிங்கம்! அந்த இடத்தில் தொட்டு.... முகம் சுளிக்க வைக்கும் கொடூர வீடியோ..!!!

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் முதியவர் அத்துமீறிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், ரயில் நிலையம் ஒன்றில் நடந்த அருவருக்கத்தக்க சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வயதான ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்ட சிசிடிவி காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது.

மே 28-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் எந்த மாநிலத்தில், எந்த ரயில் நிலையத்தில் நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

செய்தித்தாளை மறைவாக பயன்படுத்திய முதியவர்

சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி காட்சியில், ரயில் நிலைய தளத்தில் இளம்பெண் ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தனது கையில் இருந்த செய்தித்தாளை மறைவாக பயன்படுத்தி அந்தப் பெண்ணின் உடலை தவறான முறையில் தொட்டுக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: பார்க்கவே அசிங்கமா இருக்கு.... ரயிலில் தூங்கும் பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்! இதெல்லாம் எப்போ தான் ஒழிய போகுது..... அதிர்ச்சி வீடியோ!!!

அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் உடனடியாக அவரால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. சில நிமிடங்கள் தொடர்ந்த இந்த அத்துமீறல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வைரலான சிசிடிவி காட்சி

ரோஹித் சிங் என்ற எக்ஸ் பயனர் இந்த வீடியோவை பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது.

பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை உருவாகி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைது செய்ய வேண்டும் என கோரிக்கை

இந்த வைரல் வீடியோ குறித்து இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “வயதுக்குக் கூட மரியாதை இல்லாமல் இப்படி நடந்து கொண்டவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்” என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ.... வலிக்குது... தயவு செய்து விட்டுடுங்க! பயிற்சியில் கதறி துடித்த மாணவி.... கண்டுக்கொள்ளாத ஆசிரியர்.! வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#railway station #வைரல் வீடியோ #பெண்கள் பாதுகாப்பு #CCTV Footage #சமூக வலைதளம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story