சுனாமி எச்சரிக்கை! நடுக்கடலில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம்
Earthquake in sunathra tnusami alert

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்டுட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலை தாக்கியதில் பல்லாயிரகணக்கான மக்கள் பலியாகினர். இப்போது அதே போன்ற ஒரு நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கடியில் 59 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பப்டடுள்ளது.
சுமத்ரா தீவில் உள்ள தெலுக் பெட்டங் நகரில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.