பெரும் அதிர்ச்சி! தரையிறங்கும் போது திடீரென வழுக்கி கடலில் விழுந்த விமானம்! 32 ஆண்டுகள் பழமையானது... விமானம் நொறுங்கிய காட்சி..!
துபாயில் இருந்து ஹாங்காங் வந்த எமிரேட்ஸ் சரக்கு விமானம் வடக்கு ஓடுபாதையில் வழுக்கி கடலில் விழுந்த விபத்தில் தரை ஊழியர்கள் இருவர் பலி; விமானத்தில் இருந்த நால்வரும் மீட்கப்பட்டனர்.
உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மீண்டும் எழுப்பும் வகையில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
துபாயில் இருந்து ஹாங்காங் வந்த EK9788 என்ற போயிங் 747 சரக்கு விமானம், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.50 மணியளவில் தரையிறங்கும் போதே வடக்கு ஓடுபாதையில் வழுக்கி கடலில் விழுந்தது. எமிரேட்ஸ் குத்தகையில் ACT ஏர்லைன்ஸ் இயக்கிய இந்த விமானத்தில் இருந்த நால்வரும் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தரை ஊழியர்கள் பலி
அதே நேரத்தில், ஓடுபாதை அருகில் பணியில் இருந்த இரண்டு தரை ஊழியர்கள் உயிரிழந்ததாக ஹாங்காங் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது விமானத்தின் முன்பக்கமும் வால்பக்கமும் கடுமையாக சேதமடைந்து, விமானம் முழுவதும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்தது.
வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது
இந்த திடீர் விபத்துக்குப் பிறகு ஹாங்காங் விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டு விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துக்குப் பின்னர் வெளியான புகைப்படங்கள் நிகழ்வின் தீவிரத்தைக் காட்டுகின்றன.
32 ஆண்டுகள் பழமையான விமானம்
விபத்தில் சிக்கிய இந்த விமானம் சுமார் 32 ஆண்டுகள் பழமையானது எனவும், இது கடந்தகாலத்தில் பயணிகள் விமானமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விமான விபத்து புலனாய்வு ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுவரை விமானத்தில் எந்தவிதமான சரக்குகளும் ஏற்றப்பட்டிருக்கவில்லை என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்குமாறு காவல்துறை விசாரணை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிகழ்வு, சர்வதேச விமான நிலையங்களின் அவசர நடவடிக்கை தளங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உலக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஓடுபாதையில் மோதிக்கொண்ட இரண்டு விமானங்கள்! உடைந்து விழுந்த விமானத்தின் இறக்கை! வைரலாகும் பரபரப்பு வீடியோ....