×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

30 லிட்டர் ஒயினை குடித்துவிட்டு போதையில் மட்டையான 2 யானைகள்..! வைரல் வீடியோ.!

Drunk elephants collapse drinking wine

Advertisement

சீனாவில் கிராமத்திற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் அங்கிருந்த ஒயினை குடித்துவிட்டு போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கையே படுத்து உறங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெற்கு சீனாவில் கிராமம் ஒன்றுக்குகள் புகுந்த 14 காட்டு யானைகள் அங்கிருந்த தேயிலை தோட்டத்தை அடித்து நாசம் செய்ததோடு, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நாசம் செய்த காட்டு யானைகள் மக்கள் குடியிருந்த வீடுகளையும் விட்டுவைக்கவில்லை.

இதில் இரண்டு யானைகள் மட்டும், வீடு ஒன்றினை சூறையாடியபோது அங்கிருந்த 30 லிட்டர் ஒயினை குடித்துள்ளது. ஒயின் முழுவதையும் குடித்த யானைகள் அங்கிருந்து கிளம்பி மீண்டும் தேயிலை தோட்டத்திற்கு வந்துள்ளது. தோட்டத்திற்குள் வந்த யானைகள் போதையாகி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கையே போதையில் படுத்து உறங்கிவிட்டது.

இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #Drunk elephant
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story