"என்னயவாடா துரத்தி விடுற?" அம்மா வாங்கம்மா.. இளைஞர்களை தெரிந்து ஓடவைத்த நாய்; வைரல் வீடியோ இதோ.!
என்னயவாடா துரத்தி விடுற? அம்மா வாங்கம்மா.. இளைஞர்களை தெரிந்து ஓடவைத்த நாய்; வைரல் வீடியோ இதோ.!
நமது வீட்டில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்க்கப்படும். இவை தெருவில் அதற்கு அறிமுகம் இல்லாத நபர் நடந்து சென்றால் குரைக்கும். அதேபோல, நமது வீட்டிற்கு வரும் அறிமுகம் இல்லாதவரை பார்த்தும் குரைக்கும்.
பின் நாம் அதனை அமைதியாக இருக்க கூறியதும் அவை அமைதியாகும். ஆனால், தெருநாய்கள் கைகளில் தடி இல்லாமல் சொல்பேச்சு கேட்காது.
இந்த நிலையில், 2 இளைஞர்கள் தெருவில் நடந்து வரும்போது 2 நாய்கள் அவர்களை பார்த்து குரைத்தன. குட்டி நாய்களை இளைஞர்கள் விரட்ட, அவை பதற்றத்தில் சென்று தனது அம்மாவை அழைத்து வந்தது.
குட்டி நாய்களின் அம்மாவோ பார்க்க வெளிநாட்டு ரக நாய்போல பலமாக இருந்ததால் பதறிப்போன இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். இந்த விஷயம் தொடர்பான காணொளி வெளியாகி இருக்கிறது.
யாரும் இல்லாத நேரம் என நமது விளையாட்டு புத்தியை விலங்குகளிடம் சேட்டையாக நாம் செய்தால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமிர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.