×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய காத்திருக்கும் மகள்!

Daughter waiting for mom funeral

Advertisement

கொரோனாவுக்கு பெண் பலியான நிலையில், அவரது மகள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்து இறுதி சடங்கு நடத்தவுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சமீபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில், அவருடைய உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டிய நேரத்தில் அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரும் கொரோனா பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு, உயிரிழந்த  தாய்க்கு இறுதி சடங்கு நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது தாயின் உடலை அவருடைய குடும்பத்தினர் சவ பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இந்தநிலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்மணி குணமடைந்து வரும் வரை உயிரிழந்த தாயாரின் உடலை பத்திரமாக வைத்திருக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம் என்று அவரது குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #Mom funeral #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story