×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொகுசு கப்பலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மது போதையில் கற்பை இழந்த பெண்... பரிசோதனையின் முடிவில் வெளியான எச்ஐவி பாசிட்டிவ்..!

சொகுசு கப்பலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மது போதையில் கற்பை இழந்த பெண்... பரிசோதனையின் முடிவில் வெளியான எச்ஐவி பாசிட்டிவ்..!

Advertisement

அமெரிக்காவில் கலிபோர்னியா  மாகாணத்தில் வசித்து வருபவர் ஜேன் டோ என்னும் இளம்பெண். இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஏல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரின்சஸ் குரூப்ஸ் கப்பலில் பயணம் செய்துள்ளார். மேலும் அவருடன் ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் பிரின்சஸ் குரூப்ஸ் கப்பலில் பயணிகளுக்கு மது விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனை ஜேன் டோவும் வாங்கிப் பருகியுள்ளார். இதில் போதை தலைக்கேறி சுயநினைவை இழந்த ஜேன் டோ கப்பலில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றுள்ளார். ஜேன் டோ தனியாக ஏல நிகழ்ச்சிக்கு வந்திருப்பதை அறிந்த கப்பலில் இருந்த ஆண் ஒருவர் மது போதையில் சுயநினைவை இழந்திருந்த ஜேன் டோவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஜேன் டோ பல மாதங்களாக அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜேன் டோக்கு  உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜேன் டோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பதை கண்டறிந்தனர்.

 இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜேன் டோ தன்னை கப்பலில் வைத்து பாலில் பலாத்காரம் செய்தவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனையடுத்து நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Luxury ship #Sexual Harrasment #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story